பெற்றோர்களே உஷார்... சந்தோஷமாக விளையாட கிளம்பிய மகன்... காலிங் பெல்லை அழுத்திய போது உயிரிழந்த சோகம்...!

 
அஸ்வின்

கோடை விடுமுறை என்பதால், தனது வீடு இருக்கும் அதே தெருவில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு விளையாடுவதற்காக சென்ற 8ம் வகுப்பு மாணவன் அஸ்வின், காலிங் பெல்லை அழுத்திய போது, மின்சாரம் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருத்துறைப்பூண்டி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள பாமந்தூரில் வசித்து வருபவர் ரவி. இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 14 வயதில் 8வது வகுப்பு படிக்கும் அஸ்வின் என்ற மகன் இருந்தான். அஸ்வின், கச்சனம் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 8வது படித்து வந்தான்.

shock

தற்போது கோடை விடுமுறை என்பதால், அதே தெருவில் வசிக்கும் அஸ்வினின் உறவினர் வீட்டிற்கு வழக்கமாக விளையாட செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் உறவினர் வீட்டில் சென்ற அஸ்வின், கதவு சாற்றி இருந்ததால், வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி உள்ளான். இதில் மின்சாரம் தாக்கி அஸ்வின் தூக்கி வீசப்பட்டான். 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கதவைத் திறந்து வந்த உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் அஸ்வினை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அஸ்வின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த அஸ்வினின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Thruthuraipoondi PS

இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலிங் பெல்லை அழுத்திய போது மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web