பெற்றோர்களை கௌரவமாக நடத்த வேண்டும்... அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேச்சு!
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலர், ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பெரியவர்கள் நலனில் அக்கறைக் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட 15 இலட்சம் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.1200 முதியோர் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. முதியோர்கள் பொருளீட்டுவதற்கான வசதிக்காகவும், அவர்களின் வாழ்வாதார தேவைக்காகவும் இவ்உதவித்தொகை வழங்கப்படுகிறது.

646 அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ஆதரவற்றோர்களுக்கான முதியோர் இல்லங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முதியோர்களின் உரிமைகளை பராமரிப்பதற்காகவே பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர்கள் வாயிலாக புகார் அளிக்கும்பட்சத்தில் அவர்களின் குறைகளை கேட்டறிந்து சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
இச்சட்டத்தின் வாயிலாக சுமார் 2000 நபர்கள் பயனடைந்துள்ளனர். எனவே, இச்சட்டம் முதியோர்களுக்கு பயனுள்ளதாக அமையும். நாம் அனைவரும் பெற்றோர்களை கௌரவமாகவும், நல்ல ஒரு மனிதர்களாகவும் நடத்துகின்ற பொழுது வாழ்க்கையில் எல்லாம் நன்றாக நடக்கும் என அரசு செயலர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஜெயஸ்ரீ முரளிதரன், தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்து, செல்பி பாயிண்டில் மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு, முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
