3வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது...!

 
பாராளுமன்றம்
 


 
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இரு அவைகளும் எதிர்க்கட்சியினர் அமளியால் 3வது நாளாக முடங்கியுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர்   விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. உடனடியாக விவாதிக்க அவைத் தலைவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அதற்காக நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

பாராளுமன்றம்

ஆனால், நேற்று முழுவதும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் முடங்கியது. தொடர்ந்து, இன்று காலை அவைகள் கூடியவுடன் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, பகல் 12 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

பாராளுமன்றம்

"இந்த அவை விவாதம் மற்றும் உரையாடலுக்கானது, கோஷமிடுவதற்கானது அல்ல. அவையின் கண்ணியத்தைப் பின்பற்றுங்கள்" என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இன்று காலை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?