அரசு பேருந்தை பயணிகள் தள்ளிச் சென்ற அவலம்!
தர்மபுரி மாவட்டத்தில் புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு 10 மணிக்கு அரசு பேருந்து ஒன்று பொம்மிடி செல்வதற்காக பயணிகளை ஏற்றிக் கொண்டு தயார் நிலையில் இருந்துள்ளது. நீண்ட நேரமாக முயற்சி செய்தும் பேருந்து ஸ்டார்ட் ஆகாததால் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளை கீழே இறக்கிய நடத்துநர்,
பயணிகளுடன் இணைந்து பேருந்தை தள்ளிச் சென்றார். பேருந்து நிறுத்தும் நடைமேடையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு பயணிகள் அரசு பேருந்து தள்ளிச் சென்றனர். இதனை பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதையடுத்து அரசு பேருந்துகளின் செயல்திறனை அரசு விரைந்து பரிசோதிக்க வேண்டும் எனவும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!