பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்... அதிரடி காட்டும் சென்னை மாநகராட்சி!
தமிழகத்தின் தலைநகர் பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் கொட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் அல்லாமல் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்காணித்திட ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்புக் குழு அமைத்து, 15 ரோந்து வாகனங்களும் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. அதன்படி, பெருங்குடி மண்டலம், வார்டு 184ல் காலிமனையில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டிச் சென்ற 4 சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டலத்திலும் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டியவர்களுக்கு ரூ79000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் வகையில் மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவி செயற் பொறியாளர், துப்புரவு அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர் ஆகிய அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர், குப்பைகளை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் அல்லாமல் பொது இடங்கள், சாலைகள், காலி மனைகள், நீர் நிலைகளில் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவவும் கண்காணிப்பு நடவடிக்கைக்காகவும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் என 15 ரோந்து வாகனங்கள் இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த கண்காணிப்புக் குழுவினர் ரோந்து வாகனத்தில் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிடக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர் .மேலும் நீர்நிலைகள், காலி மனைகள், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதைத் தவிர்த்து தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறவும், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் பொதுமக்கள் நல்ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
