மக்களே ரெடியா... பொங்கல் பரிசுத்தொகுப்பு.... நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு தொகுப்பை பெற வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
நடப்பாண்டில் வழங்க உள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், பச்சரிசி உட்பட பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் பொங்கல் பரிசுடன் ரொக்கமாக பணம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமாக பணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!