கதறும் மக்கள்... அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் விபத்து அபாயம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் விபத்து அபாயம் நிலவுவதாகவும், இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமதிற்குள்ளாகி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் சுவர்களில் கண்கவர் வண்ண ஓவியங்கள் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அவ்வழியே செல்லும் வாகனங்களை அணுகு சாலை வழியாக செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், அணுகு சாலையின் ஓரத்தில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.
இதனால் பேருந்து போன்ற வாகனங்கள் செல்லும் போது அப்பகுதி முழுவதும் தூசு மண்டலமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மற்ற வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் 108 ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே விபத்து எதுவும் நடக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்னர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!