மாஞ்சோலை செல்ல அனுமதி... சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
“ஏழைகளின் ஊட்டி” திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலைக்கு கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெட் அலெர்ட் காரணமாக கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகளுக்கு மாஞ்சோலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

தற்போது மழை குறைந்திருப்பதால் அடுத்த பத்து தினத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு மாஞ்சோலை செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால் மீண்டும் தடை விதிக்க வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
