தேர்தல் திருவிழா... 94 தொகுதிகளில் 3-ம் கட்ட பிரசாரம் நிறைவடைந்தது!

 
தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

 

இன்று மாலையுடன் 94 தொகுதிகளில் 3-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்த 94 தொகுதிகளும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

தேர்தல்

மக்களவைத் தேர்தலை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்து அறிவித்த நிலையில், கடந்த மாதம் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. கடந்த 26ம் தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த நிலையில், 3-ம் கட்டமாக அசாம், பீகார், குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு வருகிற 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 94 தொகுதிகளிலும் கடந்த 12-ந்தேதி மனுத் தாக்கல் தொடங்கியது. 19-ந்தேதி மனுத்தாக்கல் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் ளியிடப்பட்டது. அதன் பிறகு 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு பெற்றது. 

சட்டப்பேரவை   இடைத்  தேர்தல்

3-ம் கட்ட தேர்தல் நடக்கும் 94 தொகுதிகளும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கி உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகளுக்கு ஒரே கட்ட மாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 11 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகள், தத்ரா நகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகள், காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web