பிரபல பின்னணி பாடகர் ஜெயசந்திரன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!
பிரபல பின்னணி பாடகர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கேரளாவில் காலமானார். இவருக்கு வயது 80. இவரது மறைவுக்கு திரைப்பிரலங்கள், திரை நட்சத்திரங்கள், நண்பர்கள், உறவினர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் 15000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
Shri P. Jayachandran Ji was blessed with legendary voice that conveyed a wide range of emotions. His soulful renditions across various languages will continue to touch hearts for generations to come. Pained by his passing. My thoughts are with his family and admirers in this hour…
— Narendra Modi (@narendramodi) January 10, 2025
ஒரு முறை தேசிய விருதும் மாநில திரைப்பட விருதை 4 முறையும் பெற்றுள்ளார். 1977 ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். இந்நிலையில் பிண்ணனி பாடகர் ஜெயசந்திரன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழில் புதுமைப் பெண், வைதேகி காத்திருந்நாள், சம்சாரம் அது மின்சாரம், அம்மன் கோவில கிழக்காலே, கிழக்குச் சீமையிலே, பூவே உனக்காக, சுந்தரா டிராவல்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால் உட்பட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!