மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி? குகி, ஸோ குழுக்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம்?!

 
மோடி

குகி, ஸோ குழுவினருடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில்  மணிப்பூரில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிப்பூரில் கடந்த 2023ல் வெடித்த கலவரம் மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. இங்கு அமைதியை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில்  குகி, ஸோ இன குழுக்களுடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்து தேசிய நெடுஞ்சாலை எண் 2யை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு குழுக்களும் ஒப்பு கொண்டுள்ளன.

இங்கு உருவான கலவரத்தில் இரு தரப்பிலும் 260 பேர் பலியாகினர். 1000 பேர் காயமடைந்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து வெளி மாநிலத்தில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சில நேரங்களில் அமைதி ஏற்பட்ட போதிலும் அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை நீடித்து பதற்றம் ஏற்பட்டு வந்ததால்,முதல்வராக இருந்த பிரேன் சிங் பதவியை கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். அதன் பின் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மோடி

கலவரம் வெடித்து 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பிரதமர் மோடி இந்த மாதம் மணிப்பூருக்கு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி செப்டம்பர் 13 மற்றும்14ம் தேதிகளில் அசாம், மிசோரம் மாநிலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள பிரதமர், மணிப்பூருக்கும் பயணம் மேற்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாநிலத்தின் முக்கிய இனக்குழுக்களான குகி தேசிய அமைப்பு(கேஎன்ஓ) மற்றும் ஸோ இன குழுவின் ஐக்கிய மக்கள் முன்னணி(ஐபிஎப்) ஆகியவை ஒன்றிய அரசுடன் புதிய ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளன.

மோடி
அந்த ஒப்பந்தத்தில் அனைத்து தரப்பினரும் மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணவும், தேசிய நெடுஞ்சாலை எண்-2 ஐ சுதந்திரமான இயக்கத்திற்காகத் திறக்கவும், போராளிகளின் முகாம்களை இடமாற்றம் செய்யவும் ஒப்புக்கொண்டனர்.  

எல்லை பாதுகாப்பு படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க உள்ளனர். தேசிய நெடுஞ்சாலை திறப்பது பயணிகள் போக்குவரத்து, அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்ல முடியும்.  அமைதியை உறுதிப்படுத்த பாதுகாப்பு படைகளுடன் இணைந்து பணியாறுவற்றுதாக குகி- ஸோ அமைப்புகள் உறுதியளித்துள்ளன. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் ‘‘குகி,ஸோ குழுக்களின் பிரதிநிதிகள், பல நாட்களாக நடத்தி வந்த பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இரண்டு குழுக்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் மணிப்பூரின் அமைதி நடவடிக்கையில் முக்கிய திருப்பம் ’’ என கூறியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?