நாளை பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி... வெள்ள சேதங்களைப் பார்வையிடுகிறார்!
கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பஞ்சாப் மாநிலத்தில் மிக அதிகனமழை பெய்துள்ள நிலையில், பஞ்சாப் மாநிலம் மிக மோசமான வெள்ளப் பேரிடரை சந்தித்துள்ளது. வெள்ளப் பாதிப்புக்களுக்கு 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் மாகாணத்தையும் வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது.

இந்தியாவில்இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட கன மழை மற்றும் பொங், ரஞ்சித் சாகர், பாக்ரா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிகப்படியான நீர் ஆகியவை இந்த பேரிடருக்கு முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன.
ஜீலம், சட்லெஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனையடுத்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பஞ்சாபில் 1,400 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 1. 48 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கின இந்நிலையில் பஞ்சாபில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் மோடி நாளை செப்டம்பர் 9ம் தேதி செல்கிறார்.

இது குறித்து பஞ்சாப் மாநில பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில், பிரதமர் மோடி நாளை பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு செல்கிறார். இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.
வெள்ளப் பாதிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். பிரதமரின் பஞ்சாப் பயணம் பாஜக அரசு எப்போதும் பஞ்சாப் மக்களுடன் இருப்பதை நிரூக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தல் நாளான நாளை செப்டம்பர் 9 ல் பஞ்சாபில் இருந்தபடி பிரதமர் மோடி வாக்களிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
