பிரதமர் மோடி ஜூன் 18ம் தேதி வாரணாசி செல்கிறார்... விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்றுகிறார்!

 
மோடி

பிரதமராக பதவியேற்ற பிறகு இம்மாதம் 18ம் தேதி பிரதமர் மோடி, அவரது தொகுதியான வாரணாசிக்கு செல்ல இருக்கிறார். அங்கு அவர் விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு, பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 

இந்நிலையில், வரும் ஜூன் 18ம் தேதி வாரணாசியில் நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதியின் பாஜக. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதன் பிறகு காசி விஸ்வநாதர் கோயில் சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். தஷேஸ்வமத் படித்துறையில் நடக்கும் கங்கா ஆரத்தியிலும் மோடி பங்கேற்கிறார்.


இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “யோகாவை நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுவது அவசியம். மற்றவர்களை யோகா செய்ய, ஊக்குவிப்பதும் அவசியம். யோகா அமைதி மற்றும் தைரியத்துடன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது” என்று கூறியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!