பொங்கல் தொடர் விடுமுறை... 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு... மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு- தூத்துக்குடி, பெங்களூரு - சென்னை, எர்ணாகுளம் - சென்னைக்கு இரு வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஜனவரி 10 ம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில்(07319) பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.40 க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.
அன்றைய தினம் சென்னையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் ரயில்(07320) இரவு 10.50க்கு பெங்களூருவை சென்றடையும். ஜனவரி 10 ம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில்(06569) பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜனவரி 11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மறுமார்க்கமாக சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு ஜனவரி 12 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மைசூரு வரை செல்லும்.
ஜனவரி 16 ம் தேதி வியாழக்கிழமை எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6.15 க்கு புறப்படும் ரயில்(06046) மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8.30க்கு சென்னையை அடையும்.
மறுமார்க்கமாக ஜனவரி 17 ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில்(06047) இரவு 11 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். ஜனவரி 15 ம் தேதி புதன்கிழமை திருவனந்தபுரத்தில் இருந்து காலை 4.25 க்கு புறப்படும் ரயில்(06058) அன்று இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக ஜனவரி 16 வியாழக்கிழமை நள்ளிரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்(06047) இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!