மாணவர்களுக்கு அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு... தமிழக அரசு ஒப்பந்தம்!
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்காக அஞ்சல் துறையுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையை செலுத்த வங்கிக் கணக்கு அல்லது சேமிப்பு கணக்கு தேவை. பல வங்கிகளில் வங்கிக்கணக்கு தொடங்க பல ஆவணங்கள் கேட்கப்பட்டு இழுத்தடிப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
