ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைப்பு!!
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நிர்வாகக் காரணங்களால் நிறுத்தி வைக்கப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மே 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் கலந்தாய்வு தேதி உத்தவிடப்பட்ட நிலையில் தற்போது ஒட்டுமொத்த கலந்தாய்வு நிறுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நிர்வாக காரணங்களுக்காக பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் விரைவில் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விளக்கம் விரைவில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!