செம... கீழடி அகழாய்வில் ”தமிழி” எழுத்துடன் கூடிய பானை ஓடு !

 
கீழடி

 
 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே 9 கட்ட அகழாய்வு பணிகள் மூலம் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் ஜூன் 18ம் தேதி  கீழடி, கொந்தகை ஆகிய இடங்களில் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழர் பெருமையை பறைசாற்றும் கீழடி! 8 அடி ஆழ உறை கிணறு!


இதனைத் தொடர்ந்து கீழடியில் 2 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 'தா' என்ற தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. மேலும் அந்த எழுத்துக்கு அடுத்துள்ள எழுத்து இருக்க கூடிய பானை ஓடும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக நடைபெற்ற அகழாய்வில் பல வண்ணங்களில் கண்ணாடி மணிகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!