பெளர்ணமி கிரிவலம்... திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 
பெளர்ணமி திருவண்ணாமலை பேருந்து

புரட்டாசி மாத பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை அக்டோபர் 16ம் தேதியும், நாளை மறுதினம் அக்டோபர் 17ம் தேதியும் பயணிகள் தேவைக்கேற்ப திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலம் பெளர்ணமி

புரட்டாசி மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு வசதியாக, சேலம் புறநகர் பேருந்து நிலையம், ஆத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு பேருந்து நிலையங்களில் இருந்து, பயணிகள் தேவைக்கேற்ப 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் வசதிக்காக, சேலம் புறநகர், தருமபுரி மற்றும் ஓசூர் பேருந்து நிலையங்களில் இருந்து, 16-ம் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்கி 17-ம் தேதி மதியம் 2 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

எனவே, பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc bus ticket booking என்ற செல்போன் செயலி ஆகியவற்றின் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். எனவே, பயண நெரிசலை தவிர்த்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!