தமிழ்நாடு அரசு மாஸ் அறிவிப்பு.... முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை... அரசாணை வெளியீடு!

 
முதல் தலைமுறை பட்டதாரி

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என ஏற்கனவே நிதி அமைச்சர்  சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இது குறித்த அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், "மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை உரையில்  நிதி மற்றும்   மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் வேலைவாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும்

முதல் தலைமுறை பட்டதாரி

காலி அரசு பணியிடங்கள்  முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே நேரத்தில்   கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள்,   தமிழக அரசுப் பள்ளிகள் தமிழ் வழிக் கல்வி  பயின்ற நபர்கள். 2010-2011  முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர்கள், ஒற்றைச்சாளர முறையில் தொழிற்கல்வி பயில தேர்வுபெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்களுக்கு  சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அம்மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் முழுவதையும் சில நிபந்தனைகளுடன் அரசே ஏற்று செலுத்தி விடும்.

முதல் தலைமுறை பட்டதாரி

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது குறித்து  விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web