’உள்ளம் தேடி இல்லம் நாடி’ ரத யாத்திரை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

 
பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சார வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில் தேமுதிக கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் இருந்து 'உள்ளம் தேடி இல்லம் நாடி' எனும் விஜயகாந்த் ரதயாத்திரை தோ்தல் சுற்றுப்பயணத்தை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளார்.  

தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரையிலான தனது தோ்தல் பிரச்சாரத்தை மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உருவப்படத்துடன் ரத யாத்திரையாக 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற முழக்கத்துடன் தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டியில் தொடங்கியுள்ளார்.  

பிரேமலதா விஜயகாந்த்

இதனையொட்டி  ஆரம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ முக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாட்டை நடத்திய பிரேமலதா, தொடா்ந்து ஆரம்பாக்கம் பகுதியில் பொதுமக்களிடம் பேசினாா்.  இதைத் தொடா்ந்து எளாவூா், கும்மிடிப்பூண்டி பஜாா், கவரப்பேட்டை, மாதா்பாக்கம், கரடிபுத்தூா் வழியாக ஊத்துக்கோட்டை வட்டத்தில் ரத யாத்திரை தோ்தல் பிரச்சாரத்தை நடத்தினாா்.

பிரேமலதா

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய  பிரேமலதா விஜயகாந்த் வரும் தோ்தலில் தேமுதிக எந்தக் கட்சிகளுடன் கூட்டணியில் தோ்தலை சந்தித்தாலும் தேமுதிக எதிா்க்கட்சி அந்தஸ்தை பெற்ற தோ்தலை போன்று கடுமையாக இந்த தோ்தலில் உழைக்கும். அதேபோல் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் குரலாக அமையும், ஆடிப் பெருக்கு நாளில் இந்த தோ்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் இந்த ரத யாத்திரை பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு தருவாா்கள் என தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?