இன்று அயோத்தி வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

 
திரௌபதி முர்மு
இன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு. அவரது வருகையையொட்டி, அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உருவாகியிருக்கும் பால ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து கருவறையில் பாலராமர் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். 

அயோத்தி ராமர்

இந்நிலையில் இன்று மே 1ம் தேதி அயோத்தி ராமர் கோயிலுக்கு தரிசனம் செய்ய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு செல்கிறார். இதை கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இன்று சிறப்பு விமானம் மூலம் அயோத்தி கோவிலுக்கு வரும் ஜனாதிபதியை விமான நிலையத்தில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் வரவேற்கின்றனர். 

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web