நாளை திரௌபதி முர்மு அயோத்தி வருகை... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அயோத்தியில் ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதி வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து கருவறையில் பாலராமர் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். இதில் கலந்து கொள்ள வருமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை மே 01ம் தேதி அயோத்தி ராமர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தர இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி கோவிலுக்காக சிறப்பு விமானம் மூலம் வரும் ஜனாதிபதியை விமான நிலையத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் வரவேற்க இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!