போதையில் பயங்கரம்... தனியார் பேருந்து மோதி பயணி துடிதுடித்து பலி!

 
கோவை

 கோவை மாவட்டத்தின்  முக்கியமான பேருந்து நிலையங்களில் நகரப் பேருந்து நிலையமும் ஒன்று தான். இந்த பேருந்து நிலையத்திலிருந்து  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெண் காவலர்கள் குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் பாதுகாப்போடு திருச்சி அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில்  தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்துக்குள் வந்த நிலையில், வாகனத்தை பின்னோக்கி இயக்கியதில் 2 பேருந்துக்கு  நடுவில் சிக்கி பேருந்துக்கு   இருந்த பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சக பயனிகள் கூச்சலிட்டு அலறி அடித்து ஓடினர்.அங்கு இருந்த சக பேருந்து ஊழியர்கள்  வாகனத்தை நிறுத்தி ஓட்டுனரை கீழே இறக்கியதில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர்  போதையில் இருந்துள்ளார்.

 இதனையடுத்து  ஓட்டுனரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் கோவை ஒண்டிப்புதூரில் வசித்து வந்த  திருநாவுக்கரசு விபத்தில் பலியானவர் சிவக்குமார் என்பதும் தெரியவந்தது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web