10,000 பேருக்கு வேலையிழப்பு... ரூ.30 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு.. 17வது நாளாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்!

 
ரூ.30 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு.. 10,000 பேருக்கு வேலையிழப்பு... 17வது நாளாக  பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,100-க்கும் மேற்பட்டபட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

அண்மையில் செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியர் அமைத்த 5 குழுக்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் தனி வட்டாட்சியர், வருவாய் துறையினர் மற்றும் பெசோ அதிகாரிகள் தனித்தனியாக ஆய்வுநடத்தினர்.

பட்டாசு

தொடர்ந்து, 90-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உற்பத்தி உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். அதிகாரிகளின் ஆய்வைக் கண்டித்தும், சிறு பட்டாசு ஆலைகளைக் குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறியும், தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சார்பில் மே 24ம் தேதி முதல் சிறு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், 15 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. மேலும், அதிகாரிகளின் ஆய்வு மற்றும் மழை காரணமாகவும் பல பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ.30கோடி அளவுக்கு பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

பட்டாசு உற்பத்தி மும்மூரம்! விற்பனையில் விண்ணைத் தொடும் சிவகாசி!

ஜூலை மாதம் தீபாவளி சீசன் உற்பத்தித் தொடங்க உள்ள நிலையில், மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web