கள்ளக்காதலுக்கு தடை.. கணவனை பிளாண் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி.. ஓராண்டுக்கு பின் வெளிவந்த உண்மை!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக்நகரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (42). இவர் ராணுவ வீரர். இவரது மனைவி ஜோதி (36). இந்த தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ளார். விடுமுறைக்கு வந்திருந்த தர்மலிங்கம் கடந்த ஏப்ரல் 3ம் தேதி விபத்தில் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தர்மலிங்கம் இறந்தது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தர்மலிங்கத்தின் மனைவி ஜோதி பால்பாண்டியை காதலித்து வந்தார். ஆனால் ஜோதியின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தர்மலிங்கத்துக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகும் ஜோதி பால்பாண்டியை மறக்க முடியாததால் அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் கணவர் தர்மலிங்கத்துக்கு தெரியவர, மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி, காதல் உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொல்ல திட்டமிட்டார். அதன்படி, விடுமுறைக்காக ஊருக்கு வந்த தர்மலிங்கம், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திட்டமிட்டு வேன் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, வழக்கை கொலையாக மாற்றிய போலீசார், அவரது மனைவி ஜோதி, கொலைக்கு உதவிய 18 வயது மகன், டிரைவர் பாண்டி, கிளீனர் அருண்குமார், உக்ரபாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பால்பாண்டியை தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!