வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை... விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை!
பொதுத்துறை வாகனங்களில் அவை எந்த துறையை சார்ந்தவை என ஸ்டிக்கர் ஒட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் தனியார் வாகனங்களில் காவல், பிரஸ், நீதித்துறை, வழக்கறிஞர்கள் என ஸ்டிக்கர் ஒட்டி தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். சென்னை போக்குவரத்து காவல்துறை தனியார் வாகனங்களில் இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் வாகன உரிமையாளர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. போக்குவரத்து காவல்துறையின் இந்த அறிவிப்பை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான கோரிக்கையை வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் சட்டப்பிரிவு குறைபாடான நம்பர் பிளேட் தொடர்புடையது எனவும், அந்த உத்தரவு ஸ்டிக்கர்களுக்கு பொருந்தாது எனவும், வழக்கறிஞர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
