ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்: மதுரை நந்தினி, நிரஞ்சனா கைது!

 
நந்தினி, நிரஞ்சனா
 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாக, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தக் கோரி போராட்டம் நடத்த வந்த மதுரையைச் சேர்ந்த சட்ட மாணவி நந்தினி மற்றும் அவரது சகோதரி நிரஞ்னா ஆகியோரை போலீசார்  தாம்பரம் ரயில் நிலையத்தில் கைது செய்தனர்.

மதுரை புதூரைச் சேர்ந்தவர் சட்ட மாணவி நந்தினி. தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துதல், வாக்குச்சீட்டு முறையில் மட்டுமே தேர்தல் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டம் நடத்தி வருபவர் இவர். அந்த வகையில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி இன்று தமிழக ஆளுநர் மாளிகை முன்பு நந்தினியும் அவரது சகோதரி நிரஞ்னாவும் போராட்டம் நடத்த திட்டமிட்டு, நேற்று மதுரையில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்தனர்.

ஆளுநர் மாளிகை
இந்நிலையில், இந்த தகவல் அறிந்த தாம்பரம் போலீஸார் நேற்று இரவு ரயில் வந்த இருவரையும் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைது செய்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, எச்சரித்து இரவு 11 மணிக்கு அந்தியோதயா அதிவிரைவு ரயில் வண்டியில் அவர்களை ஏற்றி மதுரைக்கு அனுப்பினர்.
முன்னதாக, தாம்பரத்தில் போலீஸார் கைது செய்யும் போது வாக்குச்சீட்டு முறையில் மட்டுமே தேர்தல் நடத்துதல் வேண்டும் என்றும் போலீஸாரை கண்டித்தும் இருவரும் கோஷங்களை எழுப்பினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!