புனே சொகுசு கார் விபத்து விவகாரம்.. சிறுவனின் தந்தை, தாத்தாவுக்கு கிடைத்தது ஜாமீன்!

 
புனே போர்ஸே கார் விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயது சிறுவனின் சொகுசு கார் மோதி ஐ.டி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவன் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தான். இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விபத்தில் சிறுவனை காப்பாற்ற ரகசிய வேலைகள் நடந்தன. ஆனால் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கடும் எதிர்ப்பின் விளைவாக சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் தங்க வைக்கப்பட்டார். அவரது தந்தையும் கைது செய்யப்பட்டார்.

 புனே விபத்து

அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடமை தவறியதாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதையடுத்து சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டார். கார் டிரைவர் தான் விபத்தை ஏற்படுத்தியதாக கூறி வழக்கை திசை திருப்ப சிறுவனின் குடும்பத்தினர் சதி செய்துள்ளனர். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

புனே போர்ஸே கார் விபத்து

இதையடுத்து, புனே சொகுசு கார் விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை கண்காணிப்பில் வைத்திருப்பது சட்டவிரோதம் என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுவனின் காவலை அவனது தந்தைவழி அத்தையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், புனே சொகுசு கார் விபத்து விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சிறுவனின் தந்தை மற்றும் தாத்தாவுக்கு புனே நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web