பிவி சிந்து - வெங்கட தத்தா திருமணம் உதய்பூரில் நடந்தேறியது... வைரலாகும் வீடியோ!
இந்திய வீராங்கனை பிவி சிந்து வெங்கட தத்தா சாயியை உதய்பூரில் நேற்று டிசம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பாரம்பரிய திருமண உடையில் அழகாக உடையணிந்து, தம்பதியினர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டனர். ஜோத்பூரின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் கலந்து கொண்டார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்” ஹைதராபாத்தைச் சேர்ந்த Posidex Technologies நிறுவனத்தில் செயல் இயக்குநராக இருக்கும் சிந்துவுக்கும் தத்தாவுக்கும் சனிக்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
Pleased to have attended the wedding ceremony of our Badminton Champion Olympian PV Sindhu with Venkatta Datta Sai in Udaipur last evening and conveyed my wishes & blessings to the couple for their new life ahead.@Pvsindhu1 pic.twitter.com/hjMwr5m76y
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) December 23, 2024
ஷேகாவத் X தளத்தில் "நேற்று மாலை உதய்பூரில் எங்கள் பேட்மிண்டன் சாம்பியன் பிவி சிந்துவின் திருமண விழாவில் வெங்கடா தத்தா சாயுடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் தம்பதியரின் புதிய வாழ்க்கைக்கு எனது வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தேன்." டிசம்பர் 24 ம் தேதி சிந்துவின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் இந்த ஜோடி வரவேற்பு விழாவை நடத்த உள்ளது. டிசம்பர் 20 அன்று சங்கீதமும், மறுநாள் ஹல்தி, பெல்லிகுத்துரு, மெஹந்தியும் நடந்தது.
திருமணம் குறித்து சிந்துவின் தந்தை, இரண்டு குடும்பங்களும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள், ஆனால் ஒரு மாதத்திற்குள் திருமணத் திட்டங்கள் ஒன்றாக வந்ததாகக் கூறினார். அடுத்த ஆண்டு தொடங்கும் பயிற்சி மற்றும் போட்டிகளில் சிந்து பிஸியாக இருப்பதால் இந்த தேதியை தம்பதியினர் தேர்வு செய்தனர்.சமீபத்தில், லக்னோவில் நடந்த சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் பேட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டியில் சீனாவின் வு லுயோ யுவை தோற்கடித்தார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!