தெருநாய் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்பட்டு தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் தொழிலாளி மல்லப்பா. ஆகஸ்ட் 27ம் தேதி கூலி வேலைக்காக மல்லப்பா சென்றார். அப்போது வேலை செய்யும் இடத்தில் தெருநாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்ட போது மல்லப்பா நாய்களை விரட்டினர். அப்போது ஒரு நாய் மல்லப்பா முகம் பகுதியில் கடித்துள்ளன.

ரத்த காயத்துடன் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் மல்லப்பாவுக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டதால் மீண்டும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்லப்பா உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவ அறிக்கையில், தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தொற்று மல்லப்பாவின் மூளையை பாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மல்லப்பா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது. இவரது உயிரிழப்பை அடுத்து அப்பகுதியில் சிறப்பு ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
