பகீர்... வாழைப்பழத்துக்கு காசு கேட்டதால் ஆத்திரம்... கத்திரிக்கோலால் குத்திய இளைஞர்கள்!
விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் பகுதியில் வசித்து வருபவர் 29 வயது சரவணன். இவர் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உழவர் சந்தை எதிரே இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் வாழைப்பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று இரவும் தள்ளுவண்டியில் வாழைப்பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்கள் குடிபோதையில் பணம் எதுவும் கொடுக்காமல் வாழைப்பழம் கேட்டுள்ளனர். அவர் மறுத்ததால் வாழைப்பழக்கடைகாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் விழுப்புரம் மருதூரில் வசித்து வரும் சரவணனின் நண்பரான காமராஜ் உட்பட 2 பேர் அங்கு வாழைப்பழம் வாங்க வந்திருந்தனர். அவர்களுக்கும், வெளிமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த வெளிமாநில வாலிபர்களில் ஒருவர், அவன் வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சரவணனை சரமாரியாக குத்தினார். தடுக்க வந்த காமராஜையும் வடமாநில வாலிபர் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் வெளிமாநில இளைஞர்கள் 3 பேரில் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை மீட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதல் சிகிச்சை கொடுத்து அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
