ராகுல் காந்தி இன்று மணிப்பூர் செல்கிறார்!

 
ராகுல்


இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 3 வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.  சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் சாமியார் போலோ பாபாவின் ஆன்மீக சொற்பொழிவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மணிப்பூர்
அதே போல்  குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர் .  அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல், வதோதரா மற்றும் மோர்பி பால விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதும் குறிப்பிடத்தக்கது.அந்த வகையில்  இன்று ஜூலை 8ம் தேதி மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி அங்கு கலவரம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்திக்க உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டும் மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த பெண்கள் ஆகியோரை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மணிப்பூர்
ஏறத்தாழ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூரில் கலவர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 221 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 60000க்கும்  மேற்பட்டவர்கள் சொந்த வீடுகளை இழந்து சொந்த ஊரிலேயே அகதிகளை போல் முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து  மணிப்பூர்  காங்கிரஸ் பொறுப்பாளர் ”கடந்த ஆண்டு வன்முறை வெடித்தபோது மாநிலத்திற்கு வந்த முதல் தேசிய தலைவர் ராகுல் காந்தி தான்.இங்கு பாதிக்கப்பட்ட  மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.  

மணிப்பூரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. ஜூலை 8ம் தேதி மீண்டும் ராகுல் காந்தி வருகையால் மணிப்பூர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ராகுல் மணிப்பூரில் இருந்து தான் தனது பாரத் ஜோடோ நீதி யாத்திரையை தொடங்கினார். பெருந்திரளாக வந்திருந்து  அவருக்கு ஆதரவளித்து, மாநிலத்தில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கினர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்  தற்போது ராகுல் காந்தி மீண்டும் மணிப்பூர் வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web