அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

 
கன மழை

சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்து வருகின்ற நிலையில், இன்று காலை  முதலே மழை மேகங்கள் சூழ்ந்திருந்தன. சாரலுடன் துவங்கிய மழை, மயிலாப்பூர், தி.நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணநாகர் என பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை பெய்து வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை

தற்போது தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, மழையும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் என 11 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இந்த  மழை மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அக்னி வெயில் முடிந்த பின்னரும், வெப்பக்காற்று குறையாமல் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை மழை பெய்து வருவது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், மழையை ரசித்து வரவேற்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web