ராமேஸ்வரம் : பாம்பன் தூக்கு பாலம் வழியாக கப்பல், படகுகள் செல்ல தடை!

 
பாம்பன் பாலம்

ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழியாக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது .கடந்த 1914ம் ஆண்டு ராமேஸ்வரம் பாம்பன் கடலில் சுமார் 2.3 கி.மீ. தூரத்திற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் மற்றும் மிக நீளமான கடல் பாலமாக பாம்பன் ரயில் பாலம் உள்ளது.

பாம்பன் பாலம்

கப்பல்கள் செல்வது செல்வதற்கு ஏதுவாக தூக்கு பாலத்தையும் கொண்டவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 110 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் பாம்பன் பாலத்தில் துருப்பிடிக்க துவங்கியதால் இரும்பு கர்டர்கள் சேதமடைந்து பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ரூ.550 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பாம்பனின் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியது. இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு ராமேஸ்வரம் வரை செல்ல வேண்டிய ரயில்கள் தற்போது மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. 

பாம்பன் தூக்குப்பாலம்
இந்நிலையில் பாம்பன் ரயில் பாலத்தில் புதிய தூக்கு பாலம் பொருத்தும் பணிகள் தற்போது துவங்கியுள்ளதையடுத்து, பாம்பன் ரயில் தூக்கு பாலம் வழியாக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் உள்ளிட்டவை கடந்து செல்ல தடை விதிக்கப்படுவதாக ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!