அரசு மருத்துவமனையில் தொடரும் அவலங்கள்... சடலத்தின் மூக்கை கடித்த எலி!

 
எலி

அரசு மருத்துவமனையின் அவலங்கள் குறித்தும், மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியம் குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவண்டு. அந்த வகையில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத ப‌ரிசோதனை‌க்காக வைக்கப்பட்டிருந்த சடலத்தின் மூக்கை எலி கடித்து சேதப்படுத்தியுள்ளது. இதனையடுத்து  உறவினர்கள் புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

பொன்னேரி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில்  ஜேசிபி ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் 34 வயது  குப்பன். இவர்  குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இவரது சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில்  வைக்கப்பட்டிருந்தது. இன்று பிரேத ப‌ரிசோதனை‌ முடிந்து  உறவினர்கள் சடலத்தை சென்று பார்த்த போது குப்பன் மூக்கை எலி கடித்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.   

மருத்துவமனை
இதனைக் கண்டித்து உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடமும், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  சடலத்தை  மருத்துவமனை ஊழியர்கள் முறையாக பராமரிக்கவில்லை எனவும் அதன் காரணமாகவே மூக்கு சேதமடைந்துள்ளது என உறவினர்கள்  குற்றம் சாட்டினர். காவல்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில்  உறவினர்கள் சடலத்தை பெற்று சென்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web