RED-Pix சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது! சவுக்கு சங்கர் வழக்கில் போலீசார் அதிரடி!

 
ஜெரால்டு ரெட் பிக்ஸ் சவுக்கு

சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை  எடுத்து வெளியிட்ட ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை நேற்றிரவு டெல்லியில் போலீசார் கைது செய்தனர். டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் சேர்மனிடம் மனு கொடுக்க சென்றிருந்த நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டை இரவு 11.30 மணி அளவில் தமிழக போலீசார் கைது செய்தனர். கோவை போலீசார் அவருக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில் டெல்லியில் இருந்து திருச்சிக்கு அழைத்து வருவதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்திய நிலையில் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

ஜெரால்டு ரெட் பிக்ஸ் சவுக்கு

இந்நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய ரெட்-பிக்ஸ் யூ ட்யூப்  சேனல் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய ஃபெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீது தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு விடுவோம் என்று ஃபெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேசன் பாபு,  பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். யூ-ட்யூப் சேனல்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டு சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக நீதிபதி குறிப்பிட்டார். 

சவுக்கு சங்கர்

மேலும் இந்த வழக்கில் அநாகரிகமாக விவாதம் செய்த ஃபெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என்று தனது கருத்தையும்  பதிவு செய்தார். இந்த வழக்கில் மனுதாரருக்கு தற்போது இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க முடியாது எனக் கூறி காவல்துறை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு ஒரு வார காலம் ஒத்தி வைத்தார். 

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்  அவரை கைது செய்ய தமிழ்நாடு போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். அவர்களின் தேடுதல் வேட்டையில் டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் சேர்மனிடம் மனு கொடுக்க சென்றிருந்த நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டை இரவு 11.30 மணி அளவில் தமிழக போலீசார் கைது செய்து டெல்லியில் இருந்து திருச்சிக்கு அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web