ரீல்ஸ் மோகம்.. பேருந்து நிலையத்தில் அட்ராசிட்டி செய்யும் மாணவர்கள்.. பதறிய பொதுமக்கள்!

 
ரீல்ஸ்

பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரது கைகளிலும் செல்போன் உள்ளது. அவற்றைப் பயன்படுத்தி ஆபத்தான மற்றும் உயரமான இடங்களில் செல்ஃபி எடுக்கவும், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் மோட்டார் சைக்கிள்களில் நடனமாடவும், பாடவும், சாகசம் செய்யவும், சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றனர்.

இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இளைஞர் ஒருவர் தொடர்ந்து சாகசங்களை செய்து சமூக வலைதளங்களில் 'ரில்ஸ்' பதிவிட்டு வருகிறார். அவரது நண்பர் தனது பந்து வீச்சில் சாகசத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீலாக வெளியிட்டார். இது பொதுமக்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ளது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சிகள் குறித்து கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வீடியோவில் உள்ள வாலிபர்களை தேடி வருகின்றனர். அதேபோல், சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தை 2 பள்ளி மாணவிகள் நிறுத்திவிட்டு, பேருந்தில் ஏறுவது போல் ஏமாற்றி சைகை காட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதை அவர்களது நண்பர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!