தூய்மைப் பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு... தர்ணாவில் ஈடுபட்ட தொழிலாளர்கள்!

 
தர்ணா


 
தஞ்சை மாவட்டத்தில்  மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளில் தூய்மைப் பெண் பணியாளர்கள் என்று ஏற முயற்சித்தனர். இந் நிலையில் பேருந்து நடத்துனர்கள் தூய்மைப்பணியாளர்கள்பேருந்தில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர்.  அலைக்கழிப்புக்கு ஆளான பெண்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் சாலையில் அமர்ந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா

இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்   அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மாற்றுப் பேருந்து மற்றும் ஆம்புலன்சில் பெண் பணியாளர்களை பணிக்கு அனுப்பி வைத்தனர்.பாதிக்கப்பட்ட பெண் தூய்மையாளர்கள் , ''நாங்கள் காலை 7:00 மணிக்கு டூட்டிக்கு போகணும். ஆபீசில் சொன்னாலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

போலீஸ்

7:15 மணிக்குத்தான் பேருந்தை இயக்க  வேண்டும் என கலெக்டர் சொல்லி இருக்காருன்னு சொல்கிறார்கள். அதான் கலெக்டர் வரட்டும் என நாங்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினோம். எங்களுடைய மேனேஜர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் இப்பொழுது போகிறோம். பேருந்தை நிப்பாட்ட சொன்னாலும் எந்த  பேருந்து நிறுத்தத்திலும்  நிப்பாட்டுவது கிடையாது. நாயை விடக் கேவலமாக நடத்துகின்றனர்” என  ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web