அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு!

 
அக்மார்க் தரச்சான்று

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களை அரிசி, மசாலா பொருட்கள், நெய், தேன், எண்ணெய் மற்றும் மாவு வகைகள் போன்ற அத்தியாவசிய 248 வகை பொருட்களுக்கு கலப்படத்தை தவிர்க்கும் வகையில் கட்டுமானர்கள் அக்மார்க் தரச் சான்று பெற்று விநியோகம் செய்து வருகின்றனர். தற்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் அரிசி, தேன், மசாலா பொருட்கள், எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். 

அக்மார்க் தரச்சான்று

அவ்வாறு விற்பனை செய்யும் போது கலப்படமற்ற தரமான பொருட்கள் என்பதை உறுதி செய்வதற்கும் அக்மார்க் தரச் சான்றிதழ் பெற்று அக்மார்க் முத்திரையும் உறையின் மேல் ஒட்டுவது அவசியமாகும். தற்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5,000லிருந்து ரூ.500ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அக்மார்க் தரச்சான்று

எனவே இந்த வாய்ப்பை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்படுத்தி அக்மார்க் தரச்சான்று பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்கள். மேலும் தகவல் பெற கிருஷ்ணன்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் அமைந்திருக்கும் மாநில அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வகங்களை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?