வசதியில்லை... இறந்தவரின் உடலைப் பெற முடியாமல் தவிக்கும் உறவினர்கள்!

 
பவான்ஜித்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில், எக்ஸ்பிரஸ் ரயில் முன்பாக திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் உடலை பெற்றுக் கொண்டு சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல போதிய வசதியில்லை என்று உறவினர்கள் தவித்து வரும் நிலையில், இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரான முல்லை கமலேஷ் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் 4வது நடைமேடையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென தானாபூரில் இருந்து பெங்களூரு செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

பின் இதுகுறித்த தகவல் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்கொலை

இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இறந்தவர் அசாம் மாநிலம், கர்பி ஆங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்த பித்து ஜித் என்பவரின் மகன் பவான்ஜித் (28) என்பது தெரிய வந்தது.

மேலும், வறுமையின் காரணமாக இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான அசாம் மாநிலத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கூலி வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வந்த போது, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். மனக்கவலையில் திடீரென சங்கமித்ரா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனையடுத்து ரயில்வே போலீசார் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். வறுமையின் காரணமாக, வசதி வாய்ப்பு இல்லாததால் பவான்ஜித்தின் உறவினர்கள் அவரது உடலைப் பெற வர முடியாத சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் பவான்ஜித்தின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அப்படி இல்லையென்றால், அவரது உடலை அடக்கம் செய்ய ரயில்வே போலீசாரே ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலரான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் முல்லை கமலேஷ் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!