ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாகவே நீடிக்கும்... ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!
ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாகவே நீடிக்கும் என்றும், வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
ஆர்.பி.ஐ. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாணய கொள்கைக் குழு (MPC) நடுநிலை நிலைப்பாட்டைத் தொடர முடிவு செய்தது. வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாகவே நீடிக்கும்.

பருவமழை நன்றாக முன்னேறி வருகிறது. இது பொருளாதாரத்தில் மகிழ்ச்சிக்குரிய தன்மையை கொண்டு வருகிறது. தொழில்துறை துறையின் வளர்ச்சி மந்தமாகவும் சீரற்றதாகவும் இருந்தது. எதிர்பார்த்தபடி, மையப் (core) பணவீக்கம் 4 சதவீதமாக நிலையாக உள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி 6.5 சதவீதமாக தக்க வைத்துக் கொண்டுள்ளது.

வழக்கமான பருவமழையை விட அதிகம், குறைந்த பணவீக்கம் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆதரிக்கிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நிலையான அளவில் தொடர வாய்ப்புள்ளது. ஜூன் மாத மதிப்பீட்டில் 3.7 சதவீதமாக இருந்த பணவீக்கம், 2026 நிதியாண்டில் 3.1 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது என்றுசஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
