நெகிழ்ச்சி!! சாவிலும் இணைபிரியா நண்பர்கள்!!

 
சாவிலும் இணைபிரியா நண்பர்கள்

பள்ளிக்காலம் முதல் ஒன்றாக படித்து கல்லூரிக்காலத்தில் ஒன்றாக சுற்றி திரிந்து இணைபிரியா நண்பர்கள் பலர். பலர் பள்ளியுடன் பிரிந்து விடுகின்றனர். மேலும் பலர் கல்லூரியுடன் பிரிந்து விடுகின்றனர். சிலர் திருமணத்திற்கு பிறகு பிரிந்து விடுகின்றனர். வெகுசிலரின் நட்பு தான் ஆண்டு ஆண்டு காலமாக தொடரும். பள்ளி காலத்தில் ஒன்றாக படித்த நண்பர், கல்லூரியிலும் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகும் இணைபிரியா நண்பர்கள் இருவர் சாவிலும் இணைந்திருக்கும் அதிசய நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நாலாம் தெருவில் வசித்து வந்தவர் சிவராமகிருஷ்ணன் (80). இவருக்கு 2 மகன் ஒரு மகளும் உள்ளனர். அதேபோல், மன்னார்குடி அருகில் உள்ள அசேஷம் வசித்து வந்தவர் ராமலிங்கம் (82). இவருக்கு 2 மகன் 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் மன்னார்குடி அடுத்து உள்ள தலையாமங்கலம் பகுதியை பூர்விகமாக கொண்டவர்கள்.

சிவராமகிருஷ்ணன் மற்றும் ராமலிங்கம் இருவரும் சிறுவயதிலிருந்து இணை பிரியாத நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். மன்னார்குடியில் இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் ஒரே அறையில் தங்கி இருவரும் பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் ஒரே நேரத்தில் மன்னார்குடி அருகே உள்ள பாமணியில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அதேபோன்று ஒரே நாளில் இருவரும் பணி ஓய்வும் பெற்றுள்ளனர்.

Tiruvarur

மேலும் இவர்களது குடும்பமும் சேர்ந்து சுப நிகழ்சிகளில் பங்கு பெறுவது சுற்றுலா செல்வது என உயிர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவரும் தற்போது அருகருகே உள்ள அசேஷம் மற்றும் நாலாம்தெரு பகுதியில் வசித்து வந்த நிலையில் சிவராமகிருஷ்ணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் காலை அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ராமலிங்கத்தின் மனைவியும் மகனும் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது ராமலிங்கம் அவர்களிடம் எங்கு சென்று வருகிறீர்கள் என்று கேட்டபோது சிவராமகிருஷ்ணனின் இறப்பிற்கு சென்று வருவதாக கூறியவுடன் அதிர்ச்சியில் அந்த நிமிடமே ராமலிங்கம்  உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றுள்ளது.

Tiruvarur

பால்ய வயதில் நண்பர்களாகி பள்ளி கல்லூரி வேலை என எதிலும் இணைபிரியாமல் உயிருக்கு உயிராக நண்பர்களாக வாழ்ந்து வந்தவர்கள் இறப்பிலும் இணைபிரியாமல் நண்பர் உயிரிழந்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் சிவராமகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web