அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கீடு... அரசாணை வெளியீடு!

 
பள்ளிக்கல்வித்துறை


அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் கடந்த 2023-24ம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டுவிழா சிறப்பான முறையில் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்

இதில், மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றும் இதற்காக, சுமார் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும்' என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த அறிவிப்பை செயல்படுத்திடும் வகையில், அரசு பள்ளிகளில் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திட, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.14 கோடியே 60 லட்சத்து 89 ஆயிரம் ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. 

+2 பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும்! அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

“உரிய அறிவுரைகளை பின்பற்றி, பள்ளி ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web