ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ25000 உதவித்தொகை.. விண்ணப்பங்கள் வெளியீடு!!

 
கல்லூரி மாணவிகள்


 தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும்மாணவர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கான தகுதித்தேர்வு விண்ணப்பங்கள்  குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் “  தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும். புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும் மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கு முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பொறியியல் கல்லூரி

இந்த அறிவிப்பின்படி கலை, மனித நேயம் (ம) சமூக அறிவியல் பிரிவைச் சேர்ந்த 60 மாணாக்கர்களுக்கும்,  அறிவியல் பாடப் பிரிவைச் சேர்ந்த 60 மாணாக்கர்களுக்கும் ஆராய்ச்சி ஊக்கத்தொகை முதல்  2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.25,000/- வீதமும், மூன்றாம் ஆண்டிற்கு மாதம் ரூ. 28,000/- வீதமும் 12 மாதங்களுக்கும் வழங்கப்படும்.  

exam தேர்வு மாணவிகள் பரீட்சை கல்லூரி

தகுதி வாய்ந்த மாணாக்கர்களை தெரிவு செய்யும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்கான அறிவிப்பு  அதிகாரப்பூர்வ இணையதளமான (https://trb.tn.gov.in/) என்ற இணையதளத்தில் அக்டோபர் 16ம் தேதி  வெளியிடப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள விரும்பும் மாணாக்கர்களுக்கு இந்த நிதியுதவி அளிக்கப்படும் .  இந்த விண்ணப்பங்களை  20.10.2023 முதல் 15.11.2023 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web