திருமண வரவேற்பு விருந்தை சாப்பிட்டதால் சோகம்.. உடல் உபாதையில் 50 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 
பழஞ்சநல்லுார்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட மணமகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த பழஞ்சநல்லுார் கிராமத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இங்கு உணவருந்திய பலருக்கு நேற்று காலை வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீராணந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தங்கதுரை தலைமையிலான மருத்துவ குழுவினர் பழஞ்சநல்லுார் கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர்.

50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால், மணமகள் அக்சயா, 20; மணவெளி வாசகி, 42; சித்தார்த், 19; ரவி, 47; நிலா, 14; ஹரிஷ், 25; வேம்பு, 50; சம்யுக்தா, 8; காஞ்சனா, 30; விஜயா, 4; உள்பட 50க்கும் மேற்பட்டோர் 108 ஆம்புலன்சில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தலைமை மருத்துவர் ஜெயச்செல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

4 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை சப் கலெக்டர் ராஷ்மிராணி, மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரவிக்குமார், தி.மு.க., கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன், நகராட்சி தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். முதற்கட்ட விசாரணையில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் வாந்தி, பேதி ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!