நாயை குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பி ஏரியில் மூழ்கி பரிதாப பலி!

 
 ஜோதிகா - ஜோதிஷ்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த புளியந்தோப்பு வட்டம், கொத்தக்கோட்டையைச் சேர்ந்த முருகன்- மாலதி தம்பதியினர் கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு ஜோதிலிங்கம் (10), ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வந்த இவர்கள், கொத்தக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.

பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா, ஜோதிஷ் இருவரும் நாயை வீட்டுக்கு அருகில் உள்ள எறாகுட்டை ஏரியில் குளிக்க அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி சகோதரி ஜோதிகா (8), தம்பி ஜோதிஸ் (7) ஆகியோர் உயிரிழந்தனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நீண்ட நேரம் போராடி நீரில் மூழ்கிய இருவரின் உடல்களையும் மீட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி ஊரக போலீஸார், ஏரியில் மூழ்கிய 2 சிறுவர்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, இறந்த குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது: இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசையில் வசித்து, கூலி வேலை செய்து வருகின்றனர்.

ஆறு மாதங்களுக்கு முன், அந்த குடிசையும் பக்கத்து வீட்டுக்காரரால் எரிக்கப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதுவரை மூன்று குழந்தைகளுடன் குடிசை இல்லாமல் தெருக்களிலும், கோவில்களிலும் வாழ்ந்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web