சோகம்.. ஸ்கூட்டியின் மீது அதிவேகமாக மோதிய டேங்கர் லாரி.. தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவி பரிதாப பலி!

 
ஆர்த்தி

சென்னை திருவல்லிக்கேணி டிபி கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி (23). மாநிலக் கல்லூரியில் வேதியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (ஜூலை 4) மாலை ரேணுகாதேவி, தன்னுடன் படிக்கும் தோழி செனாய் நகரை சேர்ந்த ஆர்த்தி (24) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

விபத்து

லேடி வெலிங்டன் கல்லூரியை நெருங்கும் போது, ​​ரேணுகாதேவிக்கு முன்னாள் சென்ற கார் திடீரென இடதுபுறமாக நின்று வலதுபுறம் செல்ல முயன்றபோது பதற்றமடைந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய ரேணுகாதேவி, இருசக்கர வாகனத்துடன் கீழே சாய்ந்துள்ளார். அப்போது, ​​அவ்வழியாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரி, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ஆர்த்தி மீது மோதியது. இதில் ஆர்த்தி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தற்கொலை

இதையடுத்து தலையில் காயம் அடைந்த ஆர்த்தியை அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆர்த்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே காயங்களுடன் உயிர் தப்பிய கல்லூரி மாணவி ரேணுகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர் தாம்பரத்தை சேர்ந்த மாடசாமியை (45) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web