பேராசிரியர் வேங்கடாசலபதி நூலுக்கு சாகித்ய அகாடமி விருது.. மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவின் 24 மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளுக்கு மத்திய அரசின் சார்பில் சாகித்ய அகாடமி விருது வழங்குகிறது. விருது பெற்றவர்களுக்கு டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, செப்புத் பட்டயம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்படும். இந்நிலையில், 2024ம் ஆண்டுக்கான விருது பெற்றவர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழ்ப் பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908' என்ற ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13, 1908 அன்று வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மக்கள் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீது ஆங்கிலேய அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மக்கள் மீது வரி விதிக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதற்கு முன்னரோ, பின்னரோ தமிழகத்தில் இப்படி ஒரு எழுச்சி ஏற்பட்டதில்லை என்று நம்பப்படுகிறது. இந்த எழுச்சியின் போக்கை ஏராளமான சான்றுகளுடன் விவரிக்கும் இந்நூல், அதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. இது குறித்து வ.உ.சி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதுடன், எழுச்சிக்கு பங்களித்த எண்ணற்ற சாதாரண மக்களின் கதையையும் புனரமைக்கிறது. இதனை கெளரவிக்கும் விதமாக பேராசிரியர் வெங்கடாசலபதி எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!