பகீர் வீடியோ... பூரி ஜெகந்நாதர் ஆலய தேர்த்திருவிழாவில் சரிந்து விழுந்த சாமி சிலை... 9 பக்தர்கள் படுகாயம்!

 
பூரி ஜெகந்நாதர் ஆலயம்
 

ஒடிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகந்நாதர் ஆலயம் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த கோவில்  உலக புகழ் பெற்ற இந்து மத வழிபாட்டு தலமாக கருதப்படுகிறது. இந்தக்கோவிலில்  நடக்கும் மிகவும் பிரம்மாண்டமான ரத யாத்திரை திருவிழாவில்  ஒவ்வொரு சாமியும் தனித்தனி தேரில் வைத்து வீதி வீதியாக பவனி வரும். இந்த காட்சிகளை காணும் போது மெய்சிலிர்க்கும். உலகம் முழுவதும் இருந்து இந்த தேர்த்திருவிழாவைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.  


இந்நிலையில் சுபத்ரா, கிருஷ்ணர் ,பலராமர் ஆகிய சாமி சிலைகளின் ரத யாத்திரை திருவிழா ஜூலை 7ம் தேதி விமரிசையாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று கோவிலில் உள்ள பாலபத்ராவின் சிலை தேரில் வைத்து யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ரத யாத்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அந்த சமயம்  ரதம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பாலபத்ரா சாமியின் சிலை சரிந்து பக்தர்களின் மேல் விழுந்தது.

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை! இவர்களுக்கு அனுமதி கிடையாது!

 இதனால் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.  படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web