யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது!

 
சவுக்கு சங்கர்

 யூடியூபர் சவுக்கு சங்கர் தனது சர்ச்சையான பதிவுகளால் அடிக்கடி காவல்துறையில் சிக்குவதுண்டு. அந்த வகையில் தற்போது காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து  யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில்  சவுக்கு சங்கரை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்து  கோவை அழைத்துச் சென்றனர்.  

சவுக்கு சங்கர்

யூடியூபர்  சவுக்கு சங்கர், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து  பதிவுகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக தனது  ஊடகத்தில்  தமிழக அரசின் செயல்பாடுகள்,  முதல்வர் மற்றும்  மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை விமர்சித்து வீடியோக்களையும் வெளியிட்டு  பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.  அந்த வகையில் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்தும் இவர் அவதூறாக வீடியோ வெளியிட்டார்.  இதன் அடிப்படையில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை, கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து, கோவை அழைத்து  சென்றனர். 

எடப்பாடி பழனிசாமி

 தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாடி   சவுக்கு சங்கருக்கு ஆதரவாக   ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் @SavukkuMedia ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது  கண்டனம் எனக் குறிப்பிட்டிருந்தார்  .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!